ஈப்போ சீக்கியர்களின் சமய சின்னம் பதிக்கப்பட்ட காலணிகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதை உள்நாட்டு வாணிபம் கூட்டுறவு அமைச்சு உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரி கெராக் சீக் எனும் இயக்கம் நேற்று மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது. இயக்கத்தின் செயலாளர் டத்தோ அமர் ஜிட் சிங் கில் போலீஸ் புகார் செய்ததோடு சம்பந்தப்பட்ட காலணி (சிலிப்பர்) தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார். சமய நல்லிணக்கத்திற்கு புறம்பாக சிலர் செயல்படுகின்றனர். மற்ற சமயங்களின் சின்னங்கள் பதிக்கப்பட்ட காலணிகள், உடைகள் தயாரிக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இப்போது இந்நிலை தொடர்கிறது. சீக்கியர்களின் சமய சின்னங்கள் பதிக்கப்பட்ட காலணிகள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக கூறினார். சீக்கிய சமூகம் இதனை வன்மையாக கண்டிக்கிறது என்றுக் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்