கோலாலம்பூர் அடுத்த மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் அமைத்தால், பிரதமராக வர பிபிபிஎம் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விருப்பம் தெரிவித்து இருப்பதை பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்கின் நிராகரித்தார். பக்காத்தான் ஹராப்பான் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு தலைவரும் முந்திச் சென்ற முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க முற்படக்கூடாது. கூட்டு தார்மீக கொள்கைகளையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த கருத்தொருமிப்பு அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று புக் கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷம்சுல் கூறினார். பக்காத்தான் ஹராப்பானுக்கான பிரதமர் வேட்பாளராக வருவது குறித்து பரிசீலிக்க தான் தயார் என மகாதீர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளர் என பக்காத்தான் ஹராப்பான் பங் காளிக் கட்சிகளிடையே இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் ஷம்சுல் குறிப்பிட்டார். பதினான்காவது பொதுத் தேர்தலில் அரசாங்கம் மாறினால் பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளராக அன்வார் இப்ராஹிமின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.எனவே, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இனிமேல் எழக் கூடாது என்றார் அவர். பதினான்காவது பொதுத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது மீதே கவனம் முழுவதும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்