தஞ்சோங் மாலிம் கடந்த 2005இல் மூன்று மாதக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு தங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற சீனப் பெற்றோரை கிருஷ்ணன் - பிச்சை தம்பதிகள் தேடி வருகின்றனர். இங்குள்ள ஜாலான் பேரோப் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன், மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்த சீனர் ஒருவர், தனது மனைவி மன நோயாளியாக இருப்பதால், நீங்கள்தான் எனது குழந்தையை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை தனது குழந்தையை வந்து பார்க்க வில்லை என்றார். போ லீ எனப் பெயர் கொண்ட அக்குழந்தைக்கு இன்று பன்னிரண்டு வயதாகியும் எந்தவொரு ஆவணமும் இல்லாத காரணத்தால் அடையாள அட்டை எடுக்க முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளார் என தெரிவித்தார். சீனச் சிறுமியின் பெற்றொர்களைப் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால், 0172352982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கிருஷ்ணன் கேட்டுக் கொள்கிறார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்