img
img

போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கிச் சூடு.
வெள்ளி 02 ஜூன் 2017 15:46:16

img

பாசிர் பூத்தே, பாசிர் பூத்தே மாவட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இறந்து கிடந்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவியல் விசாரணை பிரிவில் பணியாற்றி வந்த அகமட் அல்-ஷமிர் ஷாரிப் பெலிடின் (வயது 29) இச் சம்பவத்தில் பலியானார். நேற்று காலை காவல் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு அவர் வராத காரணத்தினால், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரைத் தேடியுள்ளனர். அவரின் இருக்கையில் அமர்ந்திருந்த வாக்கில் அவர் காணப்பட்டுள்ளார். முன் புறமாக சென்று பார்க்கையில் அவரின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த காயமும் ரத்தக் கசிவும் ஏற்பட்டிருந்ததாக கிளாந்தான் மாநிலத்தின் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் டின் அகமட் தெரிவித்தார். காலை 9.40 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் போலீஸ் அதிகாரி இறந்தது விட்டதை உறுதிப் படுத்தினர். இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி சிலாங்கூரைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பாசீர் பூத்தே காவல் நிலையத்தில் குற்றவியல் விசாரணை பிரிவில் பணியை தொடங் கியதாக டின் அகமட் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img