img
img

போலீசாரை தாக்க முயன்ற அந்நிய நாட்டவர்.
வியாழன் 01 ஜூன் 2017 12:16:21

img

கோத்தா பாரு போலீசாரின் எச்சரிக்கையை மீறி தாக்குதலை நடத்திய இரு அந்நிய நாட்டவர்கள் ஜாலான் சோலார் பாருவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.புரோட்டோன் வீரா ரகக் காரில் சென்ற 4 அந்நிய நாட்டவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் வாகனத்தை வேகமாக செலுத்தியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்கள் பயணித்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிலிருந்து வெளியானவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டதில் இருவரின் உடலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததுடன் ஸ்தலத்திலேயே மரணமுற்றுள்ளனர். மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நால்வர் இதற்கு முன்பு வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர். மேலும் இவர்கள் மீது ஏற் கெனவே பல குற்றப்பதிவுகள் இருப்பதுடன் போலீசாரால் தேடப்பட்டு வருபவர்களும் ஆவர். இந்த சம்பவம் தொடர்பில் மேல் விசாரணை தொடரப்பட்டு வருகிறது. பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில குற்றவியல் விசா ரணை பிரிவின் தலைவர் முகமட் ஃபக்ரி சே சுலைமான் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img