img
img

தமிழர் வளர்த்த தற்காப்புக் கலையும் வீர விளையாட்டும்.
வியாழன் 25 மே 2017 15:56:42

img

களம் காணும் அகிலனை அகிலம் போற்றும் தமிழர் வரலாற்றில் இருந்து சற்றும் பிரித்தெடுக்க முடியாத பெரும் மரபாக தமிழர் வீரமும், வீரத்தில் விளைந்த வெற்றிகளும், போரியல் தத்து வங்களும், வெஞ்சினத்தோடு போராடும் திறனும் என அத்தனையும் பின்னிப் பிணைந்தே வளர்ந்திருக்கின்றன. வீரத்தை விளைநிலமாக கொண்ட ஒரு இனமாக இருப்பதனால்தான் தமிழனை வீரத்தமிழன், மறத் தமிழன், அஞ்சாத் தமிழன் என வீரத்தை நெறிப் படுத்தும் பெயர்களை அவன் தனதாக்கிக் கொண்டான். எனவேதான் அந்தந்தக் காலங்களில் அறமும், அறத்துடன் சேர்ந்தே வீரமும் விதைத்த காவி யங்கள் தோன்றி இன்று எம் கண்முன்னே மலர்ந்திருக்கின்றன. சங்கம் வளர்த்த தமிழர், சங்கமருவிய காலங்களில் போதித்த போர்நெறியும், பெண்களின் வீரமும் வீரகாவியங்களும், எதிரெதிர் வீட்டில் இளவும், திரு மணமும் என போர்போற்றி வளர்நத சளைக்காத ஒரு சமூகமாக தமிழினம் தன்னைத் தேற்றியும் தெளிவாக செதுக்கியும் வளர்ந்தமைக்கு காவி யங்களும், காப்பியங்களுமே எடுத்துக்காட்டுகளாகும். இராமயண, இதிகாச புராண காலங்களில் வீரத்தையும் வீர விளையாட்டையும் ஒவ்வொரு தமிழனும் தன் அடையாளமாக்கிக் கொண்டது முதல் வெள்ைளையரை எதிர்த்துப் போரிட்டு உலகின் பல பாகங்களைக் கைப்பற்றி வைத்திருந்த தமிழ் மன்னர்கள் முதல் தமிழர் வீரத்துக்குப் பஞ்சமில்லை. பெண்கள் கூட தற்காப்பு விளையாட்டை பயின்றிட வேண்டும் என தற்காப்பை ஒரு கலையாக கருதி, தலை வணங்கி வளர்ந்த ஒரு பெரும் சமூகம் இன்று உலகிற்கு பாடம் கற்பித்துக் கொடுத்துவிட்டு, தனக்கென உள்ள அடையாளத்தயும் அங்கீகாரத்தையும் இழந்துவிட்டு மௌனித்து நிற்பதுதான் வேதனையான விஷயம். வில்லுக்கு விஜயன் மல்லுக்கு வீமன் என தற்காப்புக் கலையை விதைத்து வைத்த ஒரு சமூகத்தின் இனங்காக்கும் வீர விளையாட்டுகள் இன்று ஆங்காங்கே, அவ்வப்போது துளிக்கின்றதே தவிர பேசப்படுமளவில் மேம்படவில்லை. பேசப்பட்ட ஒரு வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கே பெருத்த துயரம்தான். கம்பு சூத்திரம், நடசாரி,வர்மக்கலை, அடிதடி,மல்யுத்தம்,களரிப்பயிற்று, சிலம்பம், முச்சாண் இரட்டை முழங்கோல் ,இரட்டை வாள் ,வாள் ,வாள், வில், கேடயம் ,வெட்டரிவாள்,பீச்சுவா ,சுருள் பட்டை ,மடுவு, சுருள் கொம்பு ,வளரி என வளர்தெடுக்கப்பட்ட ஆதித் தமிழர் கலைகள் இன்று அழிந்து தேய்ந்து அருகிக் கிடப்பதை நம்மால் மறுக்க முடியாது. மனதையும், உடலையும் வளைத்துக் கொள்ள வீர விளையாட்டும் தற்காப்புக் கலையுமே சிறந்தது என்பதை நன்குணர்ந்த சமூகத்தின்ரால்தான் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு கற்றுக்கொடுக்க முடிந்தது. இல்லையேல் திருக்குறள் போன்ற உலகப் பொதுமறை எங்கிருந்து உதித்திருக்க முடியும். ஆனால் மேலைத்தேய நாடுகள் நம்மிடம் கற்ற கலையை கராத்தேயாகவும், மல்யுத்தமாகவும் பற்றிப் பிடித்துக் கொண்டு அதை அனித்துலக ரீதியில் வீரம் செறிந்த விளையாட்டாக விளங்கிட வைக்க மறுக்கவும் இல்லை. சிங்கம், புலி போன்ற வன விலங்குகளை தோற்கடிக்க சிலம்பத்தை கலையாகக் கற்ற தமிழன் யானைய அடக்குமளவில் வீரம் செறிந்திருந்தான் எனில் உலகில் உள்ள எந்த இன வீரனுக்கும் இதைவிட கற்றுக்கொடுக்ககூடிய பாடம்தான் என்ன? மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை தமிழரின் வீரத்தில் கலந்த முக்கிய கூறுகளேதான். பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸைப் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற கலப்புத் தற்காப்புக் கலை என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம்தான். மேலும் களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலைகள் நம் முன்னோர்களால் போற்றி வளர்க் கபட்டதை தொலைத்தும் விட்டோம். ஆதித்தமிழன் செதுக்கி வளர்த்த இந்த தற்காப்புக் கலையின் அடையாளத்தை இன்று அகிலமறியச் செய்யும் அகிலன் இன்று வெல்வானோ இல்லை களமாடி வீழ்வானோ எதுவாயினும் வெற்றி நமக்கே. ஏனெனில் கருவாக உருவாக்கி களைந்தெடுத்த வளர்த்த வீரத்தமிழர் மரபு காத்த அந்தக் கலையை இந்தக் குழந்தை அறிந்ததும், கற்றதும், அணுபவித்து வளர்ந்ததும், போட்டிகளின் வென்றதும் என ஒவ்வொரு அவனசைவுகளும் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்குமே பெருமையத் தேடித்தரும். வீழ்ந்து கிடக்கின்ற எங்களுக்கு சொந்தமான கலையை வாழ்ந்த காலத்தில் வென்று எடுப்பேன் என அகிலன் வாய் உரைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் வெற்று வார்த்தையல்ல. ஒட்டுமொத்த தமிழருக்கும் உரக்கச் சொல்லும் உறுதிமொழி.ஒரு திரைபடத்தால் ஈர்க்கப்பட்டு, அதன்வழி தற்காப்புக் கலை கற்று உலகப்புகழ் பெற்ற புரூஸ்லியைப் போற்றும் உலகத்தார் இனி அகிலனை அகமகிழ்ந்து பேசுகின்ற காலம் அருகில்தான் இருக்கிறது. ஒரு சீனப் படத்தைப் பார்த்து, அதில் வரும் சண்டைக் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் அத்தகைய தற்காப்புக் கலையில் புகழின் உச்சத்திற்கு சிறகு விரித்திருக்கிறார் 22 வயதுடைய அகிலன் தாணி. எம்எம்ஏ (Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மலேசியாவின் முன்னணி வீரராக உருவெடுத்திருக்கும் செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி, நாளை சிங்கப்பூரில் நடக்கும் அனைத்துலக ஒன் ஃபைட் (ONE Fighting Championship) கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் வால்டர் வெய்ட் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்காக களம் இறங்கவிருக்கிறார். நடப்புச் சாம்பியனான அமெரிக்காவைச் சேர்ந்த பென் அஸ்க்ரெனை எதிர்த்து சிங்கப்பூர் அரங்கத்தில் நாளை அகிலன் போட்டியிடுகிறார். இந்த இடத்தை அடைவதற்காக அகிலன் சோந்த வாழ்க்கையில் அனுபவித்த துயரங்கள், சிரமங்கள், சாவல்கள் மிகக் கடுமையானவை. சின்ன வயதிலேயே அகிலனுக்கு சோதனைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தந்தையை விட்டு தாயார் பிரிந்து சென்று விட்டார். தந்தையின் அரவணைப் பில் வளர்ந்தவர் அகிலன். 16 வயது வரையில் அவருக்கு அண்டை வீட்டுக்காரர்களின் கேலிகள், ஏளனங்கள் மிகுந்த வேதனையைத் தந்தது பள்ளியில் சக மாணவர்களிடம் அகி லன் பட்ட அவமானங்களுக்கு எல்லையே இல்லை.இதற்குக் காரணம், அகிலன் ஒரு குண்டுப் பையன். 16 வயதில் 139 கிலோ எடை. ஒருநாள் அகிலன் ஒரு சீனப்படத்தை பார்க்க நேர்ந்தது. அந்தப் படத்தின் பெயர் ஷா போ லாங். புகழ்பெற்ற நடிகரும் தற்காப்புக் கலை வீரருமான டோன்னி யென் அதில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வந்த ஒரு சண்டைக் காட்சி என்னை மிகவும் கவர்ந்து, என் மனதில் ஆழமாகப் பதிந்தது. சண்டைக் காட்சியில் நடித்திருந்த டோன்னி யென், எந்த வகையான தற்காப்புக் கலையைக் கையாண்டார் என்று ஆராயத் தொடங்கினேன். அதன் பின்னர் பெட்டாலிங் ஜெயாவில் பிரேசிலின் ஜி-ஜிட் சூ எனப்படும் உடல் பயிற்சி கலை வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி செய்யத் தொடங்கிய பின்னர், மூன்று மாதங்களில் 10 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்து விட்டதால் ஏகப்பட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. 18 வயதை எட்டிய போது கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலானிலுள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. மாதம் 1,000 வெள்ளி சம்பளம். அதேவேளையில் அங்கு நடக்கும் உடற்பயிற்சி வகுப்புக்களில் அவர் கலந்து கொண்டார்.இந்தக் காலக்கட்டத்தில் தான் கலப்பு தற் காப்புக் கலைப் போட்டிகளின் மீது கவனம் திரும்பயது. இது நேரடிச் சண்டைகளில் ஈடுபடும் ஒரு தற்காப்புக் கலையாகும். கைகளாலும் கால்களாலும் கடுமையாகத் தாக்குவது, தூக்கி வீசுவது என பல்வேறு தற்காப்புக் கலைகளின் கூட்டுக் கலவையாக இது அமைந்துள்ளது. இந்த தற்காப்புப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் வந்த பின்னர் பிரேசிலின் ஜி-ஜிட் சூ உடற்கட்டு கலை, முவாய் தாய் தற்காப்புக் கலை, மற்றும் குத்துச்சண்டை ஆகியவறில் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டத்தோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடித்தேன் என்று அகிலன் கூறினார்.ஆறு மாதங்களுக்குப் பின்னர் எனது உடல் எடை 129 கிலோவிலிருந்து 93 கிலோவுக்கு குறைந்து விட்டது. 18ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்த ஜிம் மையத்திலேயே தங்கிக் கொண்டேன். சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதித் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஓராண்டு காலத்திற்கு மேலாக ஜிம்மில் தங்கியிருந்த பின்னர், தனி யாக ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வெளியே தங்கிக் கொண்டேன். மலேசியாவில் நடந்த பல எம்எம்ஏ போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். இங்கிருந்துதான் எனது இரண்டாவது கட்டப்பயணம் தொடங்கியது என்றார் அகிலன். சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் எம்எம்ஏ அமைப்பன் ஏற்பாட்டிலான ஒன் ஃபைட் போட்டிகளில் பங்கேற்ற அதேவேளையில் அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயிற்சிகளையும் அவர் பெற்று வந்தார். இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலை நாட்டி யுள்ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்தது. அடுத்து மே 26 ஆம் தேதியன்று சிங்கப்பூர் அரங்கில் அமெரிக்க வீரர் பென் அஸ்க்ரென்னை எதிர்த்து கம்பிக் கூண்டு களத்திற்குள் அகிலன் இறங்கவிருக்கிறார். ஒன் எப்.சி. வால்டர்வெய்ட் சாம்பியன் போட்டியில் பென் அஸ்க்ரென்னுக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. காரணம், அவர் நடப்புச் சாம்பியன் என்பதோடு இதுவரை 15 வெற்றிகளைக் குவித்துள்ளார். பென்னை எப்படி தோற்கடிப்பது என்பது எனக்குத் தெரியும். நான் அவ ரைக் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், வால்டர்வெய்ட் பிரிவில் சாம்பயன் பட்டத்தை வென்ற முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற நான் தயாராகி வருகிறேன் என்கிறார் அகிலன். செந்தூல் பண்டார் பாரு அடுக்குமாடி வீட்டைச் சேர்ந்த அகிலனைப் பற்றி பேசிய அவருடைய தந்தை தணிகாசலம், பிறருடன் மரியாதையாக பழகுவதி லும் அன்பு பாராட்டுவதிலும் அகிலன் எனக்கே கற்றுக் கொடுப்பான். எனக்கு எல்லாமும் அவன்தான் என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img