கிள்ளான் பள்ளியில் பயிலும் சக மாணவர்களின் பகடிவதைக்கு ஆளான ஆறாம் ஆண்டு மாணவி ஒருவர் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்தார். அவ ரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் 48 மணிநேரம் கெடு கொடுத்துள்ளனர். கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ் தேசியப் பள்ளியில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவி (வயது 12) சக மாணவர்களால் சில நாட்களாக பகடிவதைக்கு ஆளாகியுள்ளார். தம்மோடு பயிலும் மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக் கொள்வதைக் நிறுத்திக்கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளார் என நேற்று மாலை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டிங் விளக்கமளித்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த அம்மாணவியை தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்த்து துல்லியமான சிகிச்சை வழங் கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் டிங், அம்மாணவிக்கு கழுத்துப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருதயத் துடிப்பும் அதிகரித்து வரு வதுடன் மார்புப் பகுதியில் தொடர்ச்சியான ரத்தம் கசிவு ஏற்பட்டுள்ளதால் வெளியாகிக் கொண்டிருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு எதுவும் உறுதி யாகக் கூற முடியாது எனவும் தெரிவித்தார். அச்சந்திப்பின்போது கழுத்து நிபுணர், நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் லீலா ஆகியோர் உடனிருந்து விளக்கமளித்தனர். மாணவர்கள் பெற்றோர்களிடையே ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கொண்டு வரும் பிரச்சினையை பெற் றோரும் ஆசிரியர்களும் அக்கறையோடு செவிமடுத்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என கருத்துரைத்த டத்தோ ஆர்.எஸ்.மணியம், மாணவியின் மருத்துவப் பராமரிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என பெற்றோரிடத்தில் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்