பாகோ அறிவியல் ஆற்றல் எட்டாத கனியாக ஒரு காலத்தில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இருந்து வந்த வேளையில் இன்று நிலைமை மாறி அறிவியல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கே சொந்தம் என்பதுபோல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இன்று பல அரிய சாதனைகளை புரிந்து வருகின்றனர். அவ்வகையில் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாகோ திமியாங் ரெஞ்சோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஜொகூர் மாநில இளம் ஆய் வாளர்களின் அறிவியல் விழாவின் ஏ பிரிவில் தங்களின் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி முதல்நிலையில் வந்ததுடன் அடுத்த ஜூன் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தலைநகரில் நடைபெறும் தேசிய நிலையிலான இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டுள்ளனர். போட்டியில் பள்ளி மாணவர் களான ஜி.தாகேஸ்வரராஜ், ஜி.தேவதர்ஷிணி, சி.மதுமிதா மற்றும் வி.ரவியாகாஷ் ஆகியோர் 'பொருண்மையும் வேகமும்' எனும் கருவில் பொருண்மைக்கும் வேகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து அதனை சிறப்பாக செய்து காட்டியதன் வழி ஏ பிரிவு வெற்றி யாளர்களாக வாகை சூடினர். இதனிடையே அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பள்ளியில் நடந்த போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கும் அவர்களுக்கு கைகொடு த்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.பள்ளி மாணவர்களின் சாதனை பள்ளிக்கும், பள்ளி குடும்பத்தின ருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளி தலைமையாசிரியை த.லோகாம்பாள் குறிப்பிட் டார்.இந்த வெற்றி பள்ளி மாணவர் களுக்கு உத்வேகத்தை தந் துள்ளது. மாணவர்களின் அறி வியல் ஆற்றல் மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளதாக குறிப்பிட்ட த.லோகாம்பாள் பள்ளி ஆசிரியர்களுக்கும் உற்சாகத்தைத் தந்துள்ளதாக குறிப்பிட்டார். பெற்றோர்களும் மாணவர்களின் வெற்றியில் பங்கு கொண்டு பரவசமடைந்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்