img
img

கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க முடியாது.
சனி 20 மே 2017 15:07:30

img

ஏர்செல்- மெக்சிஸ் ஊழல் வழக்கில் மலேசிய கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் உட்பட இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க இயலாது. அவ்வாறு அறிவிக்கும்படி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அது நேற்று விசார ணைக்கு வந்தது. அதில், மலேசிய கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மற்றும் தனது வர்த்தக சகாவான ரால்ப் மார்ஷல் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க, சிபிஐ சார்பாக மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 2 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது என்றும், அவர்கள் மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் நீதிமன்றம் இந்த முடிவை கூறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, சி.பி.ஐ. நோட்டீஸ் விட்டும், எந்தப் பதிலும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்செல்-மெக்சிஸ் வழக்கில் கலைஞர் கருணாநிதியின் பேரன்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், இவரின் மனைவி காவேரி கலாநிதி, சௌத் ஏசியா எஃப்எம் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் மீதும் மலேசிய கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சன் டைரக்ட், சவுத் ஏசியா எஃப்எம் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் குற்றம் செய்ததற்குப் போதிய முகாந்திரம் இல்லாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img