டேவிஸ் கோப்பையின் ஆசிய-ஓசியானியா குரூப்-1 டென்னிஸ் போட்டி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா, கொரியா அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்பரி இருவரும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால், சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமநாதனுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடக்கும் முதல் ஒற்றையர் போட்டியில் ராம்குமார், கொரியாவின் சியோங் சன் ஹாங்கை சந்திக்கிறார். 3 நாட்கள் நடக்கும் இப்போட்டியின் 2வது ஒற்றையர் சவாலில் மைனினி-யாங் கியூ லிம் மோதுகின்றனர். இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ், போபண்ணா ஜோடி, கொரியாவின் ஹாங் சங், யன்சியாங் சங்கை எதிர்கொள்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் பயஸ், போபண்ணா ஜோடி களமிறங்க உள்ளது. முன்னதாக மைனினியுடனே பங்கேற்க விரும்புவதாக போபண்ணா கூறியிருந்தார். ஆனால், பயசுடன் இணைந்து விளையாட அகில இந்திய டென்னிஸ் சங்கம் அவரை நிர்பந்தித்தது. இந்த பிரச்னையில் பயஸ்-போபண்ணா இடையே நிலவிவரும் நெருக்கடி தீர இப்போட்டி ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், மைனினி கொரியா வீரர்களை எதிர்த்து விளையாடுவர். பலமில்லாத கொரியாவை இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக குரூப் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்