(கங்கார்) இந்தியாவில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நிகழ்வதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்கள் (ஏடிஎம்) மூன்று நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக கூறப்படுவதை தொடர்பு பல்லூடக அமைச்சு நிராகரித்தது.சமூக ஊடகங்களில் நேற்று பரப்பப்பட்ட இந்தத் தகவல் ஒரு புரளி என புலன் விசாரணையில் தெரிய வந்ததாக துணையமைச்சர் டத்தோ ஜைலானி ஜொஹாரி கூறினார். பொது மக்களை பீதியடைய வேண்டாமென கேட்டுக் கொண்ட அவர், இம்மாதிரியான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர் உறுதி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார்.பெர்லிஸ் ராஜா மூடா துவாங்கு சைட் பைஸடின் புத்ரா ஜமாலுல்லாயில் இங்கு தொடக்கி வைத்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதைத் தெரிவித்தார். இந்தியாவில் நிகழும் வானாகிரிப்டோர் 2.0 ரான்சம்வேர் சைபர் தாக்குதல் காரணமாக, மலேசியாவில் மூன்று நாட்களுக்கு ஏடிஎம் இயந் திரங்கள் மூடப் படவிருப்பதாக பரப்பப்பட்டு வரும் போலி தகவல் பற்றி ஜைலானி கருத்துரைத்தார். நாட்டில் இணையத்தள பயனீட் டாளர்கள் ரான்சம்வேர் தாக் குதலுக்கு ஆளானதாக இதுவரை தகவல் ஏதுமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்