img
img

பிரிம் தொகைக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்
வியாழன் 18 மே 2017 11:30:33

img

பிரிம் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மே 31 வரை கால அவகாசம் இருப்பதாக நிதியமைச்சு கூறிற்று. மலேசிய நிறுவனங்கள் ஆணை யத்தின் (எஸ்எஸ்எம்) கீழ் நிறுவனங்களைப் பதிவு செய்திருக்கும் பிரிம் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய விண்ணப் பங்களுடன் அத்தியாவசிய ஆவ ணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சு ஓர் அறிக்கையில் நினைவுறுத்தியது. நிறுவனங்களை பதிவு செய்திருக்கும் விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய பிரிம் தொகைக்கான விண்ணப்பங் களுடன் சம்பள அறிக்கை, வங்கிக் கணக்கு அறிக்கை (நிறுவனம் அல்லது தனி நபர் உட்பட) அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்காத போதிலும், 2017ஆம் ஆண்டிற்கான முதல்கட்ட பிரிம் தொகையை வழங்க அமைச்சு முன்பு ஒப்புக் கொண்டிருந்தது. எனினும் அடுத்தக் கட்ட தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், மேல் முறையீட்டு காலத்தின்போது உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விண்ணப்பத்தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்தியாவசிய ஆவணங்களை வழங்கியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதை அமைச்சு கண்டுப்பிடித்திருக் கிறது என்று அந்த அறிக்கை கூறிற்று. அமைச்சு இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்பங் களை பெற்றிருக்கிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img