பண்டார் கின்றாராவில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களின் பின்னணியில் உள்ள சந்தேகப்பேர்வழிகளை தாங்கள் அடையாளம் கண்டு விட்டதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையாளர் மெகாட் முகமட் அமினுடின் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த அந்த வளாகத்தின் உரிமையாளர் அது குறித்து கடந்த சனிக்கிழமை மாலை 4.23 மணியளவில் போலீசில்புகார் செய்துள்ளார் என்று மெகாட் குறிப்பிட்டார். தனக்கு சொந்தமான வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் தனது புகாரில் உறுதிப்படுத்தியுள்ளார். கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவம் குறித்து ரகசிய கேமராவில் பதிவான அந்த 4 நிமிட காட்சி, கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு சூதாட்ட மையத்திற்குள் நுழைந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது போதாது என்று கருதி, அங்கிருந்த பெண் கேஷியரையும் கற்பழித்துள்ளனர். அந்த கொள்ளை மற்றும் கற்பழிப்பு காட்சி அங்கு இருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன. அந்த இரு சந்தேகப்பேர்வழிகளின் முகம் ரகசிய கேமராவில் மிகத் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த இரு நபர்கள் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் மெகாட் உறுதிபடுத்தினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்