(பெட்டாலிங் ஜெயா) அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி மத்திய அரசைக் கைப்பற்றினால் ஐந்து ஆண்டுகாலத்தில் 10 லட்சம் வேலைகளை உருவாக்கும் என்று பக் காத்தான் இளைஞர்கள் கூறுகின்றனர். அசுத்தமான வேலைகளை ஈர்க்கும் தன்மையுடையவைகளாக மாற்றுவது மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்க ளைக் குறைப்பது ஆகியவற்றின் வழி இதனை அடையும் நோக்கத்தை கூட்டணி கொண்டிருப்பதாகவும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பகுதித் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார். இப்போது 3.3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் அதை 2.5 மில்லியனுக்குக் குறைக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். சரியான சம்பளம் கொடுத்தால், ஒரு மலேசியர் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலையைச் செய்ய முடியும் என்றார் அவர். பினாங்கு மாநில அரசு அதன் நகராண்மைக் கழக வேலைகளில் 2,437 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ஜ.செ.க.வின் டயானா சோபியா முகமட் டாவுட் அக்கூட்டத்தில் கூறினார். அசுத்தமான, ஆபத்தான மற்றும் கடினமான (3டி) வேலைகளில் இளைஞர்கள் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது தவறு என்று கூறிய அவர், நல்ல சம்பளம் கொடுத்தால், அவர்கள் செய்வார்கள் என்றாரவர். புள்ளிவிவர இலாகாவின் தகவல்படி, 2016 ஆம் ஆண்டில் 504,100 பேர் வேலை இல்லாதவர் கள் என்றும் அதில் 60.4 விழுக்காட்டினர் 20 - 29 வயதிற்கு இடையிலான இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்