img
img

நடராஜன் விக்னேஸ்வரனுக்கு தூக்கு!
சனி 13 மே 2017 16:00:50

img

(தைப்பிங்) போதைப்பொருளை விநியோகித்த குற்றத்திற்காக இரு நண்பர்களுக்கு தைப்பிங் உயர் நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மூன் றாண்டுகளுக்கு முன் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் 2.93 கிலோ கிராம் எடைக் கொண்ட கஞ்சா வகை போதைப் பொருளை விநியோகித்த குற்றத் திற்காக வி. நடராஜன் (30), ஆர். விக்னேஸ் வரன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்விருவர் மீதாக வழக்கு விசாரணை நீண்ட காலமாக தைப்பிங் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வேளையில் நீதிபதி முகமட் ஜைய்னி மஸ்லான் தலைமையில் இவ்வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. இவ்விரு நண்பர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க தவறினர். இதனால் 1952 அபாயகர போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவ்விரு நண்பர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு எழுதினார். நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது அவ்விரு நண்பர்களும் மிகவும் அமைதியாக காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img