கூச்சிங், மே 12- தந்தை மேல் உள்ள கோபத்தை மகள் மீது காட்டுவதற்காக 8 வயது சிறுமியின் கை விரல்களை துண்டித்த நபரின் செயல் இங்கு பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த மனசாட்சியற்ற செயலை அச்சிறுமியின் சித்தப்பாதான் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி தன் வலது கையில் இரு விரல்களை இழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் ஜாலான் பென்ரிசன் கூச்சிங்கில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமியும் அவரின் அண்ணனும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டுக்கு வந்த அச்சிறுமியின் சித்தப்பா கோபத்தில் அச்சிறுமியின் கை விரல்களை கத்தியைக் கொண்டு துண்டித்துள்ளார். வலியால் அச்சிறுமி கதறி அழுததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அச்சிறுமியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் சீராக உள்ளார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்