வீடுகளில் புகுந்து திருடுவதற்கு முன்பு அந்த வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை நன்கு கவனிக்கும் வகையில் கொள்ளையர்கள் இப்போது நமக்கே தெரியாமல் வீடுகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தும் புதிய தந்திரத்தை கையாண்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக வீடு புகுந்து திருடும் கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்தபோது அவர்களிடமிருந்து 6 ரகசிய கேமராக்களைப் பறிமுதல் செய்தபோது இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்தது என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஷாபியான் மமாட் கூறினார். தாங்கள் திருட வேண்டிய வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த வீட்டில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர். அதுவும் யாரும் சந்தேகப்படாத வகையில் வீட்டிலுள்ள பூச்சாடி போன்றவற்றில் அந்த ரகசிய கேமராக்களைப் பொருத்தி அந்த வீட்டில் உள்ளவர்களின் நட மாட்டதை கொள்ளையர்கள் முதலில் நன்கு கவனித்து வருகின்றனர். இதன் வழி எந்த நேரத்தில் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், எந்த நேரத்தில் இருப்பார்கள் போன்ற விவரங்களை துல்லியமாக கண்டு பிடித்து விடுகின்றனர். பின்னர் சரி யான நேரத்தில் அந்த வீட்டி னுள் புகுந்து கொள்ளையடித்து விடுவதாகவும் அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்