img
img

பாதுகாவலருக்கு குறைந்த ஊதியமா?
புதன் 10 மே 2017 12:19:12

img

பல்வேறு பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தனது பாதுகாவலர்களில் 108 பேருக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாக கூறப்படும் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான சிஸ்கோ செண்டிரியான் பெர்ஹாட் நேற்று கண்டனத்திற்குள்ளானது. இந்தப் பிரச்சினையை எழுப்பிய பிஎஸ்எம் ஆர்வலர் எம். சிவரஞ்சினியும் சிஸ்கோ பாதுகாவலர்கள் மூவரும், இந்த விவகாரம் தொழிலாளர் இலாகாவால் சரியாக கையாளப்படவில்லை என்றார். சிஸ்கோ நிறுவனத்தினர் விசாரணைக்கு வராமல் இருக்க அனுமதித்ததன் வழி தொழிலாளர் இலாகா பிரச்சினையை மோசமடைய செய்ததாக சிவரஞ்சினி கூறினார்.இந்த பாதுகாவலர்கள் 52 பள்ளிகளில் காவல் பணி புரிகிறார்கள். இந்த பாதுகாவலர்கள் தினசரி 12 மணி நேரம் மாதத்தில் 30 நாளும் வேலை செய்கிறார்கள். நாங்கள் கணக்கிட்டு பார்த்த போது அவர்கள் 2,100 வெள்ளி சம்பளம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு 1,700 வெள்ளி மட்டுமே வழங்கப்பட் டிருக்கிறது. மிகை நேர வேலை விகிதப்படி அல்லாமல் சாதாரண வேலை விகிதப்படியே சம்பளம் கணக்கிடப்பட்டிருக்கிறது என்று சிவரஞ்சினி தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் இலாகாவில் புகார் செய்த மூன்று பாதுகாவலர்கள் உடன் இருக்க அவர் இந்தப் பிரச்சினையை செய்தியாளர் களிடம் எழுப்பினார்.அந்த நிறுவனம் தொழிலாளர் களின் சம்பளத்தில் இருந்து அந்தந்த மாதம் 500 வெள்ளியை கழித்து வந்ததாகவும் அவர் கூறினார். சிஸ்கோவிற்கு எதிரான புகாரை மீட்டுக் கொள்ளும்படி தொடக்கத்தில் புகார் செய்த நால்வரில் ஒருவர் கட்டாயப்படுத் தப்பட்டதாக சிவரஞ்சினி தெரிவித்தார்.புகார்தாரர்களில் ஒருவர் கிளந்தானுக்கு மாறி செல்லும்படி உத்தரவிடப்பட்டார். போக தவறி இருந்தால் புகார்தாரர் வேலை இழக்க நேர்ந்திருக்கும். அவர் தனது புகாரை தொழிலாளர் இலாகாவில் இருந்து மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து வேலை இடமாற்றம் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்றார் அவர்.வேலை இடமாற்றம் செய்யும் உத்தரவு தொடர்பில் சிஸ்கோ 2017 ஜனவரி முதல் தேதி ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கையையொட்டி, நிறு வனத்தின் செயல்பாடுகளை சுமுகப்படுத்த இந்த வேலை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக சிஸ்கோ அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் இருந்து கிடைத்த ஆவணங்களின்படி, சிஸ்கோவில் ஐந்து இயக்குநர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மஇகா முன்னாள் உதவித் தலைவர் கே.எஸ்.நிஜார் என்றும் தெரிய வருகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img