மலேசியாவில் பிறந்து ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருப்போரை பதிவு செய்யும் மெகா மை டப்தார் இயக்கத்திற்கு மஇகா தலைமையேற்று வழி நடத்திச் செல்வது குறித்து பல தரப்பினர் குறை கூறியுள்ளனர். மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் அறிவித்த இந்த நடவடிக்கை, விரைவில் நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத் தேர் தலை முன்னிட்டு வாக்குகளை கவர்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஓர் அரசியல் தந்திரம் என்று விமர்சகர்கள் குறை கூறியுள்ளனர். நாடற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அரசியல் ரீதியில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று ஃபிரீடம் அமைப்பின் பேச் சாளர் என்.கணேசன் கூறினார். இம்மாதிரியான விவகாரங்களை கையாளும்போது தேசிய பதிவு இலாகாவால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். ஆனால், இப்போது அரசாங்கம் இந்த பொறுப்பை ஓர் அரசியல் கட்சியிடம் ஒப்படைத்து இருக்கிறது என்று கணேசன் கூறினார். அவர் இப்போது பினாங்கில் இம்மாதிரியான விவகாரங்களை கவனித்து வருகிறார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்