img
img

டிபிகேஎல் மீது போலீஸ் புகார்!
புதன் 10 மே 2017 11:20:19

img

ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் விவகாரத்தில் தலையிடுவதுடன் வீடுகளை உடைக்க நோட்டீஸ் வழங்கியுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மீது அப்பகுதி மக்கள் நேற்று செந்தூல் போலீஸில் புகார் செய்தனர். பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஜிஞ் சாங் செலாத்தான் தம்பா ஹானில் லோட் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் வீடுகளை கட்டி பல ஆண் டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வீடுகள் அமைந்திருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டது. ஆகையால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல நோட்டீஸ்களை வழங்கி வருகிறது. ஆகக் கடைசியாக வழங்கிய நோட்டீசின் அடிப்படையில் இப்பகுதி மக்கள் மே 18ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும்.இல்லையென்றால் வீடுகள் அனைத்தும் உடைக்கப்படும் என டிபிகேஎல் எச்சரித்துள்ளது. இப்படி ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் தான் பிஎஸ்எம் அதில் தலையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பிஎஸ்எம் கட்சியில் மத்திய செய லவை உறுப்பினர் அருட்செல்வம் கூறினார். இவ்வீடமைப்புப் பகுதி அமைந்துள்ள நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்கெனவே மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டது.இனி இப் பிரச்சினையில் உரிய முடிவுகளையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டிய உரிமை மேம்பாட்டு நிறுவனத்திற்கு தான் உண்டு.ஆனால் இன்றைய தினம் வரை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இப்பிரச்சினையில் தலையிட்டு வருவது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கோலாலம்பூர் மாநகர் மன்றத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளை தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. அப்படி விசாரணையில் சிக் கியுள்ள ஓர் உயர் அதிகாரி தான் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் வீட்டு பிரச்சினையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதன் அடிப்படையில் இவ் விவ காரத்தில் ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கும் என சந்தேகம் எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கில் தான் அப்பகுதி மக்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர் என்று அருட்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் இன்று மூன்று பிரிவுகளாக பிரிந்து உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த பொன்னம்பலம் கீழ் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இதன் அடிப் படையில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினர் இந்நடவடிக்கை குழுவை சந்தித்து பேச வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது என்றும் அருட்செல்வம் கூறினார். இதனிடையே ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான் வீடமைப்பு விவகாரம் குறித்து விரைவில் மனித உரிமை ஆணையம், தேசிய ஊழல் தடுப்பு ஆணை யத்திலும் புகார் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img