img
img

இந்தியர்களிடையே குண்டர் குண்டர்தனம் அதிகரிப்பு.
திங்கள் 08 மே 2017 13:19:30

img

(சுங்கைப்பட்டாணி) இந்திய பள்ளி மாணவர்களிடையே குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், இந்து சமய இயக்கங்கள் ஆகியவற்றின் ஈடுபாடு அவசியமாகும் என கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஜுக்கிர் முகமட் இசா வலியுறுத் தியுள்ளார். குறிப்பாக, கோலமூடா மாவட்டத்தில் இந்திய மாணவர்களிடையே குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதில், அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் உண்மை நிலவரத்தை பற்றி விளக்க மளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ம.இ.கா., அரசு சார்பற்ற இயக்கங்கள், ஆலய பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று ஏசிபி. முகமட் ஜுக்கிர் உடன் சந்திப்பு நடத்தியபோது அவர் இவ் வாறு கருத்துரைத்தார். குண்டர் கும்பல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அண்மையில் கைது செய்யப்பட்ட இடைநிலைப் பள்ளி யைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் நிலவரம் குறித்து அவரிடம் கேட்டறியப்பட்டது. கடந்த மே 3-ஆம் தேதி அம்மாணவர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் எண்கள் பதிக்கப்பட்ட கேக் வெட்டும் நிகழ்வில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அது அந்த 3-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவமாகுமே தவிர பழைய புகைப்படங்கள் கிடையாது என்றும் போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார். இந்த சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு, கெடா மாநில ம.இ.கா.தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங்கும் தானும் மாணவர்களை விடுவிப்பது குறித்து போலீஸ் தலைவருடன் பேசியதாகவும், மாணவர்களை விடுதலை செய்யும் பொறுப்பு அரசாங்க வழக்கறி ஞரிடம் உள்ளது என்று அவர் கூறிவிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ம.இ.கா. மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். இந்த சந்திப்புக்கூட்டத்தில் கெடா மாநில ம.இ.கா. பொறுப்பாளர்கள், சுங்கைப்பட்டாணி அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர் டத்தோ சந்திரன், சுங்கைப்பட்டாணி சுப்ரமணியர் தேவஸ்தான தலைவர் பெ.ராஜேந்திரன், மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img