ஊழலுக்கு எதிரான தங்கள் போராட்டத்தின் உச்சக்கட்டமாக 3ஜே மற்றும் கெரா (ஊழல் ஒழிப்பு புரட்சி இயக்கம்) என்ற பெயரில் இரு மாபெரும் இயக்கங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) இன்று தொடங்குகிறது. இந்த இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மலேசிய நண்பன் நாளிதழ் உட்பட நாட்டின் முக்கியமான மும்மொழி முன்னணி நாளேடுகளை எம்.ஏ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இன்று மாலை 6.00 மணிக்கு மலேசிய நண்பன் தலைமையகத்தில் நடைபெறும் இவ்வியக்கத்தின் அறிமுக நிகழ்ச்சியில் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அஹ்மட், எம்.ஏ.சி.சி. அதிகாரிகள், மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் பிரிவின் போலீஸ் ஆணையர் டத்தோ ஏ.தெய்வீகன், மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமாருல் கான், ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்