img
img

இந்து மதத்தை இழிவுப் படுத்தி பேசியதற்காக பெர்லிஸ் முஃப்திக்கு எதிராக போலீஸ் புகார் !
ஞாயிறு 07 மே 2017 11:13:14

img

இந்து மதத்தை இழிவுப் படுத்தி பேசியதற்காக பெர்லிஸ் முஃப்திக்கு எதிராக நேற்று மத்திய போலீஸ் நிலையத்தில் பேரா ஹிண்ட்ராப் பொறுப்பாளர்கள் போலீஸ் புகார் செய்தனர். கடந்த மே 2 ஆம் தேதி யூடியூப் மூலமாக இந்து மதத்தை இழிவுப் படுத்தி பேசிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்நாட்டில் மத நல் லிணக்கத்திற்கு புறம்பாக செயல்படும் இவரது செயல் குறித்து போலீசார் பாரபட்சமின்றி புலன் விசாரணை மேற்கொள்ளும் படி போலீஸ் புகார் செய்யப்பட்டது என்று பேரா ஹிண்ட்ராப் பேராளர்களுக்கு தலைமை ஏற்றுள்ள நாகேஷ் கிருஷ்ணன் கூறினார். இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் அவரது பேச்சு அமைந்துள்ளது. பெர்லிஸ் சமய அறிஞராக உள்ள அவர் இது போன்று பேசியிருப்பது வேதனை யைத் தருவதோடு இவரது இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் இதன் உள்நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் வெளிப் படையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். போலீஸ் படைத் தலைவர் இவ்விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நாட்டில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img