(கோம்பாக்) போலீசுக்கு சொந்தமான எம்பிவி வகை காருடன் தப்பியோடிய ஆடவரை போலீசார் தேடி வருவதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அலி அஹ்மாட் நேற்று கூறினார்.பத்துகேவ்ஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றை இரு ஆடவர்கள் உடைக்க முயற்சிக்கின்றனர் என்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அக்கிடங்கை சோதனையிடும் நோக்கில் போலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினர்.போலீஸ் அதிகாரிகள் கிடங்கிற்குள் சென்றதுடன், திருட முயன்ற ஆடவன் ஒருவன் போலீஸ் வாகனத்துடன் தப்பியோடினான். மற்றொரு ஆடவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். சுமார் 1 மணி நேரத்திற்கு பின் அவ்வாகனத்தை போலீசார் லத்தார் நெடுஞ்சாலையில் கைப்பற்றினர்.சம்பந்தப்பட்ட ஆடவன் காரை அந்நெடுஞ்சாலையில் விட்டு சென்றுள்ளான். அவனை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது என்று அலி அஹ்மட் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்