(ஜொகூர்பாரு) உரிமம் இன்றி அழகியல் நிலையத்தை நடத்தி வந்ததோடு அழகுக்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்ட ஒரு மருத்துவர் உட்பட இரு பெண் களுக்கு ஜொகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று 93 ஆயிரம் வெள்ளி அபராதத்தை விதித்தது.செஷன்ஸ் நீதிபதி முகமட் காலிட் அபு காரிம் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து டாக்டர் சுசானா ஹஸ்னான் (வயது 52) மற்றும் எங்கிவிஸா (வயது 54) ஆகியோருக்கு அந்த அபராதம் தண் டனையாக விதிக்கப்பட்டது. சியோல் பியூட்டி நிறுவன பொறுப்பாளர்களான இருவரும் தாமான் மோலேக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு சுகாதார அமைச்சின் அனுமதியின்றி தனியார் அழகு நிலையத்தைக் கொண்டிருந்ததாக முன்னதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். தனியார் அழகு சேவைக் கான மையத்தை கொண்டிருந்ததாக இருவர் மீதும் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்