img
img

பள்ளி மாணவன் கால்கள் துண்டிக்கப்பட்டு மரணம்.
வியாழன் 04 மே 2017 15:37:16

img

(கோத்தா திங்கி) கோத்தா திங்கி சமயப்பள்ளி மாணவன் ஒருவனை ரப்பர் குழாய் கொண்டு கால்களில் தாக்கிய பள்ளி விடுதி உதவி வார்டனை நீதிமன்ற கட்டுப்பாட்டில் 20 ஆயிரம் வெள்ளி பிணையில் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று விடுவிக்க அனுமதித்தது. மாணவனின் கால்களில் தாக்கிய சம்பவத்தால் கருப்பு நிறத்தில் கால்கள் மரத்து, கால்களை துண்டாக்கும் நிலை ஏற்பட்டு மரணம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக புகார் கூறப்பட்டு வரும் வேளையில் அந்த சந்தேக நபரை கோத்தா திங்கி குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் உதவி சூப்ரிண்டெண்டன் முகமட் பைரோஸ் இஸ்னின் விடுவிப்பதற்கான அனுமதி விண்ணப்பத்திற்கேற்ப செஷன்ஸ் நீதிபதி சலாவத்தி டி ஜம்பாரி உதவி வார்டனை விடுவிக்க அனுமதித்தார். முன்னதாக நேற்று நண்பகல் 12.17 மணிக்கு போலீசாரின் பாதுகாப்புடன் சந்தேக நபர் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். சில நிமிடங்களில் அந்நபர் தனது உடன்பிறப்பு ஒருவருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி னார். முன்னதாக தாப்பிஸ் சமயப்பள்ளி மாணவன் முகமட் தாஹிப் அமின் முகமட் கடாபி தாக்கப்பட்ட சம் பவம் தொடர்பில் மாணவனின் தாயார் செய்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் 29 வயது டைய அந்த உதவி வார்டனை போலீசார் கைது செய்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img