img
img

உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலியுறுத்தினார் பிரதமர்
புதன் 03 மே 2017 14:21:24

img

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரையில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு முதலாளிமார்களை வலியுறுத்தினார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக். தொழிலாளர் உருமாற்றத் திட்டத்தில் அரசு தனது இலக்கினை நிறைவேற்றுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மாபெரும் வேலை கண்காட்சி ஒன்றை அரசு ஏற்பாடு செய்யும். இம்மாதம் 20ஆம் தேதி இக்கண்காட்சி 11 புறநகர் உருமாற்று மையங்களில் தொடங் கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். முடிந்தால் மலேசிய தொழிலாளர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். அந்நியர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி கொண்டிருக்க வேண்டாம். உள்ளூர் வாசிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாற்று திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நடவடிக்கை குறித் தும் பிரதமர் பேசினார். இவர்களுக்கான ஒரு திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார். உருமாற்றுத் திட்டத்தின் கீழ் இத்தகைய செயல்பாடானது மாற்று திறனாளிகளின் திறனாற்றலை மேம்படுத்த உதவும். அரிப் கஸ்தூரி என்ற வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர் மாற்று திறனாளி நூரஸிஸா முகமட் ஸம்ரி என்பவர். இவரின் வெற்றிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img