img
img

அரசாங்கத்தை குறை கூறினால் உபகாரச் சம்பளம் பறிக்கப்படும்.
செவ்வாய் 02 மே 2017 13:16:24

img

பொதுச்சேவை இலாகா (ஜே.பி.ஏ) உபகாரச் சம்பளத்தில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் எவரேனும் அரசாங்கத்தை குறைகூறுவது கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களின் அந்த சலுகை பறிக்கப்படும் என்று ஜே.பி.ஏ தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஜைனால் ரஹிம் சிமான் (படம்) எச்சரித்துள்ளார். முகநூல், அகப்பக்கம் போன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அம்மாணவர்கள் கருத்துப் பதிவேற்றம் செய்வது கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களுக்கான உபகாரச் சம்பளத்தை வாபஸ் பெறுவதுதான் நியாயமான நடவடிக்கை என்று அவர் கருத்து ரைத்தார். சீன நாளிதழ் ஒன்றுடனான பேட்டியில் அவர் அவ்வாறு கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தலைசிறந்த மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் வழங்கப்படு கிறது. தவிர, அரசாங்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்காக அல்ல. எதிர்காலத்தில் அவர்கள் கல்விகற்ற நிபுணர்களாக வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img