img
img

மகாதீருக்கு எதிராக அன்வார் திருப்பபடுகிறார்?
சனி 29 ஏப்ரல் 2017 15:09:48

img

1990 ஆம் ஆண்டு பேங்க் நெகாராவிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய அந்நியச் செலாவணி இழப்புத் தொடர்பான ஊழலில் சிறப்பு பணிக் குழுவிற்கு நான் வழங் கிய வாக்குமூலத்தை துன் மகாதீருக்கு எதிராக பயன்படுத்த அரசாங்கம் இப்போது திட்டம் கொண்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார். அந்த ஊழலை விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவிடம் 1990 இல் பேங்க் நெகாராவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப் தான் மூலகாரணம் என்று நான் தெரிவித்து இருந்தேன். தற்போது அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் முன்னாள் பிரதமரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியை தோற்றுவித்தவருமான துன் மகாதீருக்கு எதிராக என்னுடைய வாக்கு மூலத்தை பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்று அன்வார் தெரிவித்தார். பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட இழப்பினால் டான் ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப் பதவி விலக வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த அன்வார், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். எனினும் டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப், பின்னர் துன் அப்துல்லா அகமட் படாவி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற போது, இரண்டாவது நிதி அமைச் சராக நியமிக்கப்ப்ட்டார். ஆனால், நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் டான்ஸ்ரீ நோர், எந்த சமயத்திலும் அந்த நிதி கழகத்தில் சம்பந்தப்படக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்துல்லா அகமட் படாவி காலத்தில் டான்ஸ்ரீ நோர் இரண்டாவது நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். நான் அவரை பதவி விலகும்படி அறிவுறுத்தியபோது, தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்து வரும் மகாதீருக்கு எதிரான எனது வாக்குமூலத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. என் னைப் பொறுத்தவரையில் மகாதீருக்கு எதிராக என்னுடைய வாக்குமூலத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அந்நியச்செலாவணி ஊழல் தொடர் பில் அன்வார் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்று தொடர்புத் துறை மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சல்லே சையிட் கெருவாக் கூறி யிருப்பது தொடர்பில் கருத்து கேட்டபோது அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img