img
img

செரண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி அதிரடியாக நிறுத்தம்
சனி 29 ஏப்ரல் 2017 14:56:59

img

செரண்டாவில் புதிய தமிழ்ப் பள்ளியினைக் கட்டுவதற்கு அதற்கான நில, சாலை மற்றும் நீர்ப்பாசன திட்ட வரைபடங்களை குத்தகையாளரோ அல்லது ஆலோசகரோ இதுவரை மாவட்ட மன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்காததால் அதன் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு பணித்துள்ளதாக உலுசிலாங்கூர் மாவட்ட மன்ற கட்டடப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் துணை கல்வியமைச்சரும் உலுசிலாங்கூர் நாடாளு மன்ற உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன், செரண்டா தமிழ்ப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கு உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம்தான் முட்டுக் கட்டையாக இருப்பதாக டேசம் இணையத் தளத்தில் செய்தி வெளி யிட் டிருந்தார்., இதனைக் கேள்வியுற்ற கோலகுபுபாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ யோங், மாவட்ட மன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ விக்னேஷ், முரளி, கிராமத்து தலைவர்கள் கே.பாலச்சந்தர், சின்னையா, உதவியாளர் சுப்பையா ஆகியோருடன் மாவட்ட மன்ற தலைவருடன் ஒரு சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அச்சந்திப்பு நிகழ்வில் மாவட்ட மன்ற தலைவர் செரண்டா தமிழ்ப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கான உண்மையான காரணங்களை தெளிவு படுத்தினார். நேற்று முன் தினம் இணையத் தளத்தின் வழி மாவட்ட மன்றம் செய்தியாளர்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. மிஞாக் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் உரிமத்தைக் கொண்டு யு.எம்.டபள்யூ க்கு சொந்தமான நிலத்தில் செரண்டா புரோடுவா தொழிற்சாலை தாமான் மெலாதி மற்றும் டேசா கியாம்பாங் அருகே கல்வி அமைச்சு லாட் 16029ல் கட்ட திட்டமிட்டிருந்தது. கடந்த 18.6.2015ல் புதிய பள்ளியைக் கட்டுவதற்காக தொழிற்சாலை நிலத்தை மாற்றி பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்திருந்தது. அதன் பிறகு குத்தகையாளர் அல்லது ஆலோசகர் பள்ளிக்கான நில, சாலை மற்றும் நீர்ப்பாசன வரைபடங்களை மாவட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத் திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் குத்தகையாளர் நிலத்திலுள்ள மரங்களை அழித்து மேட்டுப் பகுதிகளை கரைத்து ஆரம்ப கட்ட வேலைகளை செய்யத் தொடங்கினர், நில வரை படங்களை அனுப்பாமல் வேலைகளைத் தொடங்கியதால் மாவட்ட மன்றம் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கடந்த 6.12.2016ல் குத்தகையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டதற்கு தங்கள் மீதுள்ள குறைகளை மறைப்பதற்கு மற்றவர்கள் மீது வீண் பழியை சுமத்துவது ஏற்புடைய செயலாகாது. எத்தனையோ பெரிய கட்டடங்களைக் கட்டி வரும் கல்வியமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட குத்தகையாளரோ அல்லது ஆலோசகரோ நில வரை படங்களை மாவட்ட மன்றத்தின் பார்வைக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை என சாந்திப்பின்போது கேள்வி எழுப்பினர். கடந்த ஆறு ஆண்டு காலமாக இழுபறியாக இருந்து வரும் செரண்டா தமிழ்ப் பள்ளியின் பிரச்சினைக்கு இப்பொழுது யார் காரணம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதால் இனியாவது விடிவு காலம் பிறக்குமா என்பதை பலரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img