நாட்டின் குறுகிய கால மற்றும் நீண்டகால நலன்களை பாதுகாக்கும் வண்ணம் அரசாங்கம் துணிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நிதியமைச் சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். வெறும் புகழ்ச்சியாக அது காரியமாற்ற விரும்பவில்லை. யதார்த்த நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். எதிர்க்கட்சியின் பாணியினை நாம் கடைப்பிடிக்க வேண்டுமானால் யதார்த்த நிலையினை விட்டு நாம் விலக வேண்டி வரும். எது சாத்தியம்; எது சாத் தியமில்லை என்று எதிர்க்கட்சிக்கு நன்கு தெரிந்திருந்தும் அதிகாரத்திற்கு வந்தால் அதனை செய்வேன் இதனை செய்வேன் என்று அர்த்த மற்ற வாக் குறுதிகளை வழங்குகிறது. அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் இவர்களைப் போல நடந்து கொள்ளலாகாது. எந்தவொரு முடிவுகள் நாங்கள் எடுத்த போதிலும் நாம் இவற்றிற்கு பொறுப்பு டைமை கொண்டவர்களாக இருப்போம். நேற்று நிதியமைச்சின் பணியாளர்களுக்கு தலைசிறந்த விருது வழங்கும் வைபவம் நடைபெற் றது. நிதியமைச்சர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்த வைப வத்தில் உரையாற்றினார். செலவு செய்வதில் அரசாங்கம் சிக்கனத்தை கடைப்பிடித்து வருகிறது. நாட்டின் பொருளாதார அடைவு நிலை இதற்கு சான்று பகரும். நாட்டின் வளர்ச்சி சராசரி 4.3 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக் காடு என்று நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்