முன்னாள் முதுகலை மாணவி ஒருவர் ஐ.எஸ்.என்ற இஸ்லாமிய தீவிரவாத பிரிவு சம்பந்தமான 12 நூல்களை கைவசம் வைத்திருந் ததால் நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் முதுகலை மாணவி சித்தி நூர் ஆயிஷாவிற்கு 5 வருட சிறைத் தண்டனை என நீதித் துறை ஆணையர் முகமது ஷாரிப் தெரி வித்தார். இவரின் கைவசம் உள்ள நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட வேண்டும் என்றும் நீதித் துறை ஆணையர் உத்தரவிட்டார். ஆய்வுப் பணிக் காக இந்த நூல் களை பெற்றதாக கூறிக் கொள்ளும் சித்தி முதுகலை பட்டப்படிப்பிற் காக தன்னை பதிவு செய்து கொள்ளவே இல்லை. சித்தி தனது வாக்குமூலத் தில் முரணாக காணப்படுகிறார். இவ்வழக்கில் அரசு தரப்பு உண்மை நிலையினை ஐயத்திற்கு இடமின்றி நிலைநாட்டியுள்ளது. தனது கட்சிக்காரர் சித்தி நூர் ஆயிஷாவிற்கான தண்டனையை குறைக்குமாறு வழக்கறிஞர் கமாரூஷாமான் அப்துல் வஹாப் வலியுறுத்தினார். முதல் முறையாக இவர் குற்றம் செய்துள்ளார். விரிவுரையாளரின் போதனை இதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். எனவே, தண்டனை குறைக்கப்பட வேண் டும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்