img
img

மாடியிலிருந்து தவறி கர்ப்பிணி பலி!
வியாழன் 27 ஏப்ரல் 2017 13:21:48

img

தாமான் ஸ்ரீ கெபாயான் அடுக்ககத்தின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலியான ஜேக்லின் ரிபோட் (வயது 25) வீட்டின் பால்கனியில் துணியை உலர்த்தியபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார். மாலை 4.30 மணியளவில் அவர் அடுக்ககத்தின் கீழ் பகுதியில் விழுந்துள்ளதைக் கண்டு அங்குள்ளவர்கள் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதுகாவலர்கள் போலீசுக்கு தெரியபடுத்தியுள்ளனர். மூன்றாவது மாடியின் பால்கனியில் துணிகளை உலத்துவதற்காக இருந்த இரும்புக் கம்பி உடைந்திருந்ததை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அந்த இடத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலி இருந்ததால், துணியை காய வைப்பதற்காக அம்மாது நாற்காலியின் மீது ஏறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 12 மீட்டர் உயரத்திலிருந்து அம்மாது கீழே விழுந்துள்ளதாக கோத்த கினபாலு மாவட்டத்தின் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ஜோர்ஜ் தெரிவித்தார். அம்மாது துணியை காய வைத்தபோது இரும்புக் கம்பி அதன் பிடியிலிருந்து கழண்டுள்ளது. இதனால் பிடிமானமில்லாமல் அம்மாது கீழே விழுந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img