img
img

கோபமுற்ற ஆசிரியர் மாணவன்மீது நாற்காலி வீச்சு!
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 12:13:27

img

தன் ஆசிரியர் வீசிய நாற்காலி தாக்கியதில் தலையில் காயமுற்றதாகக் கூறும் எட்டு வயது பள்ளி மாணவனுக்கு தலையில் எட்டு தையல்கள் போடப் பட்டதாக அச்சிறுவனின் வாவா என அறியப்படும் 34 வயது தாயார் கூறியுள்ளார். இங்குள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அச்சம்பவம் நடந்துள்ளது. அதையடுத்து தலையில் ஆழ மான அகலமான காயம் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். அத்தொடக்கப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் வேறொரு மாணவரை திட்டிக் கொண்டு அவர் மீது நாற்காலியை வீசினார். எனினும் அது குறிதவறி தன் மகனின் தலையை காயப்படுத்தியதாக தன்னிடம் கூறப்பட்டது என அத்தாய் தெரிவித்துள்ளார். அதே பள்ளி ஆசிரியரான வாவாவின் கணவர் விவரம் அறிந்து அச்சிறுவனை சிகிச்சைக்காக குயின் எலிசெபத் மருத்துவமனை 1 க்கு கொண்டு சென்றுள் ளார். சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பெற்றோரின் புகாரையடுத்து இவ்வழக்கு போலீஸ் புலனாய்வில் உள்ளது என மாநில கல்வி இயக்குநர் டத்தோ மைமுனா சுஹாய்புல்கூறியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img