இருதய சிகிச்சையின் போது தமது இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததாகக் கூறி, மாது ஒருவர் அரசாங்கத்தின் மீதும் மருத்துவர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளார். செர்டாங் மருத்துவமனையைச் சேர்ந்த இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் அப்துல் முய்ஷ் ஜாசித் மற்றும் மலேசிய அரசாங் கத்தை பிரதிவாதிகளாக அந்த மாது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள உயர் நீதிமன்ற பதிவகத்தில் ஐ.பெர்தேமாவதி என்ற அந்த மாது தம்முடைய வழக்கறிஞர் டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ் மூலம் சிவில் வழக்கை தாக்கல் செய்தார். பெர்தேமாவதிக்கு இருதய அறுவை சிகிச்சை டாக்டர் செய்தபோத அந்த சிகிச்சைக்கான வழிமுறைகளில் நிகழ்ந்த அலட்சியம் காரணமாக இடது பக்க மார்பகத்தை இழக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்டாங் மருத்துவமனை இச்சம்பவத்திற்கு விளக்கம் தரத் தவறிவிட்டதைத் தொடர்ந்து பெர் தேமாவதி இந்த வழக்கைத் தொடுத்துள்ளார் என்று வழக்கறிஞர் டத்தோ அருணன் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்