மலாக்கா, தஞ்சோங் கிலிங் கில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்களுடன் தங்கியிருந்த 17 வயது பெண்ணை ஒரு பாட்டிலைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அதே மையத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர். நோர்ஷியஸ்வானா அஸ்மி, நூர் இமான் நினா டபேரி, மைஸாத்துல் ஹனிஸா அப்துல்லா, நோர்லிஹானி முகமட் ஸைரி ஆகிய நால் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுங்கை லேரா எனுமிடத்தில் உள்ள தூனாஸ் பக்தி பள்ளியின் மெலோர் ஹோஸ்டலில் தங்களுடன் தங்கியிருந்த மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். தலா 15,000 வெள்ளி ஜாமினில் அவர்களை விடுவித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அகமட் சஸாலி ஒமார், மே 17ஆம் தேதி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்