போலி ஐ போன் 6எஸ் ரகக் கைப்பேசியை குறைந்த விலையில் விற்று வந்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்ததன் வழி அந்நடவடிக்கை போலீ சாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கைப்பேசிகளை வெ.500க்கு அந்த கும்பல் விற்று வந்துள்ளது. தற்போது சந்தையின் அதன் அசல் விலை வெ.3,000 ஆகும். பெட்ரோல் நிலையத்திலும் இங்குள்ள பேரங்காடிகளிலும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலி கைப்பேசிகளை விற்று வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை இந்த கும்பலிடம் போலி கைப்பேசியை வாங்கி ஏமாந்த இரு நபர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செராசிலும் அம்பாங்கிலும் 24,52 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்