img
img

இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் தே தாரேக்-ரொட்டி சானாயை அதிக விலைக்கு விற்கிறார்கள்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 11:39:22

img

இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களான மாமாக் உணவகத்தினர் தாங்கள் விற்பனை செய்யும் ரொட்டி சானாய் மற்றும் தே தாரேக்கிற்கு அதி கமாக விலை நிர்ணயிப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர் நேற்று கடிந்துக்கொண்டார். சீனிக்கு உதவித் தொகை யாக கிலோவிற்கு 34 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில உணவக உரிமையாளர்கள் இன்னமும் தே தாரேக்கிற்கு ஒரு கிளாசுக்கு 50 காசு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கிறார்கள் என்று அவர் குறிப் பிட்டார். உண்மையிலோ ஒரு கிளாஸ் தே தாரேக்கிற்கு ஒரு கிலோ சீனியா கலக்கிறீர்கள்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று துங்கு அட்னான் கேட்டுக்கொண்டார். இதேபோன்று கோதுமைமாவு மற்றும் எண்ணெய்க்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் எதற்காக ரொட்டி சானாய் விலை அந்த அளவிற்கு விலை ஏற்றம் கண்டுள்ளது என்று அவர் வினவினார். கண்மூடித்தனமாக லாபத்தை சம்பாதிக்காதீர்கள். அது ஹராம் ( சட்டவிரோதமானது) என்று நேற்று இங்கு மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸான கிம்மாவின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார். அவர் இவ்வாறு கூறிய போது கிம்மா உறுப்பினர்கள் பலத்த கைத்தட்டல் வழங்கினர்.ஆதாயத்தை தேடுவதை நீங்கள் நோக்கமாக கொள்வீர்கள் என்றால் நீங்களும் எதிர்க்கட்சிகளைப் போல் ஆகிவிடுவீர்கள். பிறகு உங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும் என்றார் அவர். சீனி விலை கிலோவிற்கு 20 காசு மட்டுமே உயர்ந்து இருக்கும் போது ஒரு கிளாஸ் தே தாரேக்கிற்கு நீங்கள் கூடுதலாக 50 காசு கட்டணத்தை உயர்த்துவது பகுத்தறிவுக்கு எட்டக்கூடிய காரியமா? இவ்வாறு கூடுதலாக விற்பனை செய்வது அபத்தமானதாகும். நீங்கள் விலையை உயர்த்தி எங்களை சாகடிக்கிறீர்கள் என்றார் அமைச்சர் உணர்ச்சி வசப்பட்டவராக.இந்த விலை உயர்வுதான் கோதுமைமாவு, சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருள்களிலும் விலை உயர்வு எதிரொலிக்கிறது. நீங்கள் விலையை உயர்த்தவில்லை என்பதை மறுக்க முடியுமா? கூடுதல் பட்சமாக அதிக விலைக்கு உணவுப்பொருள்களை விற்பனை செய்வது ஹராமாகும் என்று அம்னோ பொதுச் செயலாளருமான தெங்கு அட்னான் தெரிவித்தார்.தற்போது நகரங்களில் வாழ்கின்றவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இதில் உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருள்களை விலையை உயர்த்தி நிலைமையை மேலும் மோசமாக்குகிறார்கள். பிறகு அரசாங்கம்தான் இவ்வாறு செய் கிறது என்று எதிர்க்கட்சியினர் தவறாக முத்திரை குத்தி விடுகின்றனர் என்றார் அவர். உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் சுமையை குறைக்க அரசாங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என்று தெங்கு அட்னான் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img