நகைக்கடை கொள்ளையர்கள் நகைகளை மூட்டையாக தூக்கிச் செல்வதை பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், பட்டர்வொர்த் பிறை யில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆடவர்கள் நகைகளை அதன் தட்டோடு மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கிச் சென்ற காட்சி அங்குள்ள மக்களை திகைக்க வைத்தது. இச்சம்பவம் நேற்று காலை 11.40 மணியளவில் பிறை, தாமான் சைலெங் பார்க்கில் உள்ள நகைக்கடை ஒன்றில் நிகழ்ந்தது.இரு மோட்டார் சைக்கிள் களில் வந்த மூன்று ஆடவர்கள் பாராங்கத்தி, சுத்தியலுடன் கடைக்குள் நுழைந்து கண்ணாடிப் பேழையை உடைத்து இரு தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அலேக்காக அங்கிருந்து அபகரித்துச் சென்றனர். கொள்ளையிட்ட நகைகளை தட்டோடு தங்கள் மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு அவர் கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். நகைகளின் மதிப்பு பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்