ஜொகூர் பாரு மாவட்ட தேசியப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களைக் கொண்டு தமிழ் மொழி விழா தாமான் யூனிவர் சிட்டி தேசிய பள்ளி 4 இன் மண்டபத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்ற வேளையில் மாவட்டத்திலுள்ள 16 தேசிய பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்மொழி விழாவை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உரையாற்றிய ஜொகூர் பாரு மாவட்ட கல்வி இலாகா அதிகாரி என்.விஜயன் எந்தப் பள்ளியில் படித்தாலும் தாய்மொழி பயில்வதற்கான வாய்ப்பு இருக்குமானால் அந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் பயில்வதற்கு பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குறைந்தது 15 மாணவர்கள் விரும்பினால் தேசிய பள்ளிகளில் தமிழ் வகுப்பை தொடங்க முடியும் என்ற அவர் இந்த வாய்ப்பை பெற்றோர்கள் கைவிட்டு விடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். தமிழ் மொழி விழாவை சிறப்புடன் ஏற்பாடு செய்த தேசிய பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கும் அவர் பாராட்டு களைத் தெரிவித்துக் கொண்டார். தேவாரம், கதை கூறல், நாட்டியம் என பல பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெற்ற வேளையில் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் பிரேமா ராமமூர்த்தி விழாவை திறம்பட ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்