ஜொகூர் மாநிலத்தில் கள்ள எண் விற்பனை தொடர்பில் 67 மையங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் 11 பெண்கள் உட்பட 68 பேரை கைது செய் தனர். இச்சோதனையில் 26 போலீஸ் அதிகாரிகளும் 94 போலீசாரும் ஈடுபட்டதாக ஜொகூர் மாநில குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாப் நேற்று தெரிவித்தார்.அச்சோதனையில் 65 தொலைபேசிகள் 75 அச்சு இயந்திரங்கள், கள்ள எண்களை எடுத்ததற்கான 6,159 வெள்ளி ரொக் கப் பணம் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. கைதான 68 பேரில் 11 பெண்கள் உட்பட 66 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அவர், மற்ற இருவர் வங்காள தேசம், இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்றும் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்