அடுத்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு முதல் 20 காசு வரையில் உயரும் சாத்தியம் உள்ளது என்று பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அறிவிக்கப்படும் பெட்ரோல் விலை ஏற்றம் - இறக்கமாக இருந்து கொண்டு இருக் கிறது. அதற்கான உதவித் தொகையை மறுபடியும் வழங்கு வதற்கு அரசாங்கம் தயாராக இல் லாததே இதற்கான காரணமாகும். அடுத்த வாரம் பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 10 காசு முதல் 20 காசு வரையில் உயரும் சாத்தியம் உள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம் - இறக்கம் உல களாவிய சந்தையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை சிரியாவில் இராணுவ விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக் கில் தற்போது கடுமையான நெருக்கடியும் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த வாரம் பெட்ரோல் விலை உயர்வது திண்ணம் என்கிறார் ரபிஸி.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்