img
img

எஸ்பிஎம் மாணவர்களுக்கு இணைய வழி சிறப்பு வகுப்பு!
சனி 08 ஏப்ரல் 2017 13:26:13

img

எஸ்பிஎம் மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவும் வண்ணம் சிலாங்கூர் மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இணையதளத்தின் வழி எஸ்பிஎம் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். இத்திட்டத்தில் பங்கு பெற மாணவர்கள் selangorfreetuition.com&CÀ என்ற அகப்பக்கத்தில் பதிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிந்து கொண்டு, வகுப்புகளைத் தொடர்ந்த மாணவர்களில், இந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெறும் முதல் 5 மாணவர்களுக்கு, வெ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று இத்திட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் அறவாரியம் ஏற்று நடத்தும் இத்திட்டத்தின் வழி சுமார் 18 ஆயிரம் எஸ்பிஎம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மொழி, அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் புலமை பெறவேண்டும் என்ற கல்வி அமைச்சின் கொள்கை இதன்வழி நிறை வேற் றப்படும் என்று சிலாங்கூர் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி ஸாஹூரா ஸக்ரி கூறினார். தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்தினை காணொளி வழியாக மாணவர்கள் மீள்பார்வை செய்து கொள்ளலாம். குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்க ளின் பிள்ளைகளுக்கென உருவாக்கப்பட்ட இந்த பிரத்தியேக வகுப்பிற்கு மாணவர்கள் முதலில் இணையத்தில் பதிவுசெய்து கொண்ட பிறகு பாடங் களைப் படிக்கத் தொடரலாம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img