தாசேக் குளுகோர் எம்.பி. கூறியுள்ள ஆலோசனையானது பெண்ணினத்திற்கே பெரும் கேவலத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவனுக்கே அந்த பெண்ணை திரு மணம் செய்து தர வேண்டும் என்ற மிக மட்டமான கருத்தை தான் வன்மையாக கண் டிப்பதாகவும் ஜசெக வின் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு நேற்று கூறினார். இம்மாதிரியான சம்ப வங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நிகழ்கின்றன என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பல வேளைகளில் திருமணமான பெண்கள் கூட இம்மாதிரியான வன்செயலுக்கு ஆளாகின்றனர். அந்த திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா என்று காமாட்சி வினவினார். பாலியல் பலாத் காரத்திற்கு ஆளாகும் சிறுமியை அந்த ஆட வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா? இப்படிச் செய்வதால் நாட்டில் இம்மாதிரி யான சம் பவங்கள் அதிகரிக்காதா? பாலி யல் பலாத்காரம் கடுமையான குற்றம். அதற்கான தண்டனையை கடுமை யாக்க வேண்டுமே தவிர சம் பந்தப்பட்டவரையே மாப்பிள்ளையாக்கி விழா காணச் சொல்வது முட்டாள்தனமான செயல் இல்லையா என்றும் அவர் சாடினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்