img
img

நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு கல் வீச்சு!
வியாழன் 06 ஏப்ரல் 2017 14:06:30

img

வடக்கு, தெற்கு நெடுஞ்சாலையின் 96.2ஆவது கிலோ மீட்டரில் நான்கு பள்ளி மாணவர்கள் வாகனங்களை நோக்கி கற்களை வீசியதாக அவர்களை நெடுஞ்சாலை வாரிய ரோந்து அதிகாரிகள் கைது செய்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஷுக்கிர் முகமட் இசா கூறினார். நெடுஞ்சாலையில் கார்களை நோக்கி சில ஆடவர்கள் கற்களை வீசுவதாக வாகனமோட்டிகள் நெடுஞ்சாலை வாரிய ரோந்து பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன் நெடுஞ்சாலை ரோந்து பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந் தனர். வடக்கு, தெற்கு நெடுஞ்சாலையின் 96.2ஆவது கிலோ மீட்டரில் ஒரு மேம்பாலத்திற்கு கீழே அந்த நான்கு ஆடவர்கள் வாகனங்களை நோக்கி கற் களை வீசுவதை கண்டதாக அவர் சொன்னார். உடனே அந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து கோலமூடா மாவட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக ஏசிபி முகமட் ஹுக்கிர் தெரிவித்தார். இந்த நான்கு ஆடவர்களும் 14 வயதுடைய பள்ளி மாணவர்கள் என்றும் இவர்களை குற்றவியல் பிரிவு 427 இன் கீழ் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். தங்கள் கார்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை யாரிடமிருந்தும் புகார்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img