img
img

பள்ளிக்குச் சென்ற மகன் வீடு திரும்பவில்லை!
வியாழன் 06 ஏப்ரல் 2017 13:48:31

img

பள்ளிக்குச் சென்ற தன் மகன் நான்கு நாட்களாகியும் இன்றுவரை வீடு திரும்பாதது தொடர்பில் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இங்குள்ள சுங்கை பீலேக் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயிலும் மாணவர் விக்னேஸ் ராவ் த/பெ வாசகம் வயது (14) இம்மாதம் ஏப். 3ஆம் தேதியன்று மதியம் 12.40 மணியளவில் எண்.48 தாமான் ஸ்ரீ மெர்பாவ், சுங்கை பீலேக் எனும் தமது இல்லத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் நான்கு நாட்களாகி விட்ட நிலையில் இன்றுவரை வீடு திரும்பவில்லை என தந்தை வாசகம் குறிப்பிட்டார். பள்ளிச் சீருடையுடன் வெளியேறிய மாநிறம் கொண்ட அவர் 169 செ.மீட்டர் உயரத்தை கொண்டிருப்பதுடன் தலைமுடி நேராகவும் கட்டையாகவும் வைத்திருப்பார் என தந்தை வாசகம் தமது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். காணாமல்போன தன் மகனை காண்பவர்கள் 012-9735261 என்ற எண் ணிலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் வழங்கி உதவுமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img