img
img

பல்கலைக்கழக தங்கும் விடுதியின் கழிப்பறையில் மீட்கப்பட்ட ஆண் சிசு!
வியாழன் 06 ஏப்ரல் 2017 13:34:46

img

கடந்த வியாழக்கிழமை இங்குள்ள பொது பல்கலைக்கழக தங்கும் விடுதியின் கழிப்பறையிலிருந்து ஆண் சிசு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக் கழக மாணவியின் காதலனை போலீசார் ஜித்ராவில் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 20 வயதுடைய மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிசுவின் உடலை பரிசோதனை செய்ததில், அந்த சிசு பிறக்கும்போது உயிருடன்தான் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.ஆகையால் சிசு இறந்ததற்கான காரணத்தை கண்டறிய இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற் கொள்ள அந்த மாணவியின் 19 வயது காதலனையும் கைது செய்துள்ளதாக கெடா மாநில குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ முகமட் நசிர் யா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாணவி 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இங்குள்ள பொது பல்கலைக்கழகத்தில் சிசுவின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் ஜித்ரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை தொடர்ந்து வருவதாக முகமட் நசிர் யா தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img