நாட்டின் 15ஆவது பேரரசர் சுல்தான் முகமட் தி அரியணை அமரும் விழாவை முன்னிட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா ஓர் அறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாட்டின் 15ஆவது பேரரசராகப் பொறுப்பேற்றுள்ள கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகமட் தி அரியணை ஏறும் விழா இம்மாதம் 24ஆம் தேதி காலையில் இஸ்தானா நெகாராவின் பாலாய்ரூங் ஸ்ரீ-யில் நடைபெறும். அன்றிரவு அரச விருந்தும் நடைபெறும் என அலி ஹம்சா குறிப்பிட்டார். இதனை அடுத்து, மே மாதம் 2ஆம் தேதி அரச அருங்காட்சியகத்தில் நம் அரசர் என்ற கண்காட்சி நடத்தப்படும் என்றாரவர். 47 வயதான சுல்தான் முகமட் கடந்த டிசம்பர் 13 ஆம் நாள் நாட்டின் 15 ஆவது பேரரசராக நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்