img
img

டெங்கில் ஆலய விவகாரம்!
செவ்வாய் 04 ஏப்ரல் 2017 13:50:31

img

சிலாங்கூர் மாநிலத்தில் டெங்கில் பட்டணத்திற்கு அருகில் அம்பார் தெனாங் தோட்டத்தில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்தவர்களின் ஒரே ஒரு வர லாற்றுப்பூர்வ சின்னமாக இருந்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தையும் அழிக்க நினைக்கும் ஆட்சிக்குழு உறுப்பினரின் நடவடிக்கைக்கு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உடந்தையாகச் செயல்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு சுமார் 200 பேர் விடைகாண விரும்புவதாக நண்பன் குழு கருதுகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இடம் பெயர்விற்கு உட்படுத்தப்பட்ட சுமார் 300 இந்திய குடும்பங்கள் தங்களின் வாழ்வியலையும் அடையாளங் களையும் இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான ஆலயம், இடுகாடு, தமிழ்ப்பள்ளிகளையும் இழப் பதற்கான நடவடிக்கைகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மனச்சாட்சியே இல்லாமல் செயல்படுவது நியாயமா என பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு யார் பதில் தரப் போகின்றார்கள்? முதலை வாயிலிருந்து புலியின் வாயிற்குள்! சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் முதலை வாயிலிருந்து தப்பிப்பதற்காக புலியின் வாயில் நுழைந்த சூழலைத்தான் முழுமையாக எதிர்நோக்கியிருப்பதாக நண்பன் குழு கருதுகின்றது. டெங்கில் அம்பார் தெனாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் பஞ்சமுக விநாயகர் ஆலயம் நிர்வாகத்தின் செயல்பாடுகளை யார் நிர்ணயம் செய்தது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவே நண்பன் குழு கருதுகின்றது. இதற்கிடையே சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் உத்தரவின் பேரில்தான் 30.9.2016இல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்; * எஸ்.டி. புரோப்பர்ட்டி (SD Property Sdn. Bhd.) நிறுவனம் ஹிண்ட்ராப்பின் கடிதத்தினை உதாசீனப்படுத்த வேண்டியும்; * பஞ்சமுக ஆலயத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிக்கையினை வெளியிட வேண்டும். போன்ற நடவடிக்கைகளை ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவித்தாரா என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர். சிலாங்கூர் மாநிலத்தில் ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் இடுகாட்டு நிலங்கள் தொடர்பான விவகாரங்களைத் தீர்க்க வேண்டிய மந்திரி புசார் எதிர்மறையாகச் செயல்படுவது நியாயமா என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் இருப்பதை நண்பன் குழு வலியுறுத்துகின்றது. தோட்ட மக்களின் கோரிக்கைகள்: டெங்கில், அம்பார் தெனாங் தோட்ட மக்களின் அடிப்படை உரிமையைக் கூட கேட்டுப் பெற முடியாத மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினரின் செயல்பாடுகளை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிண்ட்ராப் தலைமையில் கூடியவர்களின் கோரிக்கைகளை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் ஆய்வு செய்ய வேண்டும் என்பதனை நண்பன் குழு வலியுறுத்து கின்றது. * ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 ஆண்டுகளுக்கும் மேலான மாரியம்மன் ஆலயத்தினை இருக்கும் இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும். * குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலமாவது ஆலயத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். * ஆலய மறு நிர்மாணிப்பிற்கு நியாயமான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். * அம்பார் தெனாங் தோட்ட இந்தியர்களின் வரலாற்றுச் சின்னமான ஆலயத்தை அழித்துவிட வேண்டாம். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சிலாங்கூர் மாநில இந்தியர்களைப் பொறுத்தவரையில் மக்கள் கூட்டணி அரசாங்கமும் இந்தியர்களைக் கைவிட்டு உள்ளதாகவே உணர்ந்து வருகின்றனர். ம்பார் தெனாங் ஆலய விவகாரத்திற்கு தீர்வு வருமா?வராதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img