தன் வசமிருந்த பெல்டா குளோபல் வென்ட்சர்ஸ் (எப்ஜிவி) பங்குகளை கடந்த ஆகஸ்டில் விற்றதில் ஊழியர் சேமநிதி வாரியத்திற்கு (இபிஎப்) வெ. 203.18 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. நேற்று திங்கட்கிழமை நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்து வடிவ பதிலில் இது குறிப்பிடப் பட்டிருந்தது. இபிஎப் எந்தெந்த நிறுவனங்களில் நிதி நிலை தொடர்ந்து சரிந்து வருகிறதோ, நிர்வாகத்தில் குறைபாடு காணப்படுகிறதோ அந்த நிறுவனங்களில் வைத் துள்ள பங்குகளை குறைத்துக் கொள்ளும் அல்லது முற்றாக விற்று விடும் என்று அமைச்சு அவ்வாரியத்தின் முதலீட்டு வியூகத்தை விளக்கியது. இந்த 20 கோடி வெள்ளி இழப்பு என்பது பெரிய தொகையாகும். தொடக்கத்தில் இபிஎப், எப்ஜிவி-இல் 4.5 விழுக்காடு பங்கு வைத்திருந்தது. பின்னர் அது 2013-இல் 8.49 விழுக்காடாக உயர்ந்தது. எப்ஜிவி 2012-இல் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் முதன்முதலாக அதன் பங்குகளை வெளியிட்டபோது (ஐபிஓ) அதன் மூலமாக வெ.10 பில் லியன் மூல தனத்தைத் திரட்டியது.அந்த ஆண்டில் உலகிலேயே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அடுத்தப் படியாக மிகப் பெரிய ஐபிஓ-வாக அது கருதப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு பங்கு வெ.4.55 ஆகக் கைமாறியது. ஆனால்,அதன் பின்னர் பங்குவிலை தொடர்ந்து இறங்குமுகமானது. 2015-இல் அது வெ.1.19 என ஆகக் குறைந்த நிலைக்கு இறக்கம் கண்டது. இதைப் பதிவிடும் நேரம் எப்ஜிபி பங்குகளில் பரிவர்த்தனை வெ.2.09 ஆக இருந்தது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்